டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தண்ணீருக்கு இரத்தம்: ம. அஹமது நவ்ரோஸ் பேகம்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

தவித்த வாய்க்கு தண்ணீர் தருவது தர்மம்  என்றனர் அன்று,தண்ணீர் கேட்டால் பகை கொண்டனர் இன்று.போகும் வழியெல்லாம் ஆறு, குளம் வெட்டி போய்ச் சேரும் முன் புண்ணியம் தேடினர் அன்று,காவிரி நீர் கேட்டதற்காக, பிழைக்க வந்த மக்களை கருணையின்றி  அடித்துக் காயப்படுத்துகின்றனர் இன்று.தன் குழந்தைகள் அனைவருக்கும் பாகுபாடின்றி  அள்ளித் தரும் தாய் போலன்றி ,செல்வங்களை விரித்தும், சுருக்கியும் மனிதர்களுக்கு இறைவன் வழங்கியுள்ளது இல்லாதவர்க்குஈயும் இதயம் கொள்வதற்கேயாம்.பலருக்கு அளவின்றியும், சிலருக்கு அளந்தும் வளங்களைத் தந்ததும் இயற்கையின் குற்றமன்று.என் நாட்டினர் எல்லோரும், என் சொந்தம் என்றும்,எனக்குரியது , உனக்கும் உரியதென ஒவ்வொருவர் நெஞ்சிலும் நேசம் இருக்கும் வரையில் மக்களின் மனதில் மட்டுமல்லாது, நீர்நிலைகளிலும் என்றும் ஈரம் வறண்டு போகாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.